கிராமிய அபிவிருத்தி பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமானது 1974ஆம் ஆண்டு தாபிக்கப்பட்டதுடன் அக்காலகட்டத்தில் கிராமிய அபிவிருத்தித் துறையின் வளர்ச்சிக்காக பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள் மூலம் மட்டுமே தனது பங்களிப்பைச் செய்தது. பாரம்பரிய ரீதியான கிராமிய அபிவிருத்தி மூலம் பௌதீக அபிவிருத்திக்கு முன்னுரிமை வழங்கப்பட்ட ஒரு பிரவேசத்தின் ஊடாக கிராம அபிவிருத்திக்கான இலக்குகளை அடைந்து கொள்வது ஒரு பாரிய சவாலாகக் காணப்பட்டது. அதனடிப்படையில் 1978ஆம் ஆண்டு பங்களிப்பு அபிவிருத்தி எண்ணக்கருவை நடைமுறைச்சாத்தியமாக்கும் விதத்தில் செயற்பாடுகளுடன் தொடர்புடைய பயிற்சி ஆய்வு நிகழ்ச்சிகளாக மாற்று முகவர்களுக்கான நிகழ்ச்சிகளை ஆரம்பிக்கும் முறைசார் உபாய வழிமுறைகளது பிரதிபலனாக ஆய்வு மற்றும் அபிவிருத்தி பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. அதன் ஊடாக புதிய அபிவிருத்தி பிரவேசமொன்றாக, பங்கேற்றல் அபிவிருத்தி எண்ணக்கருவை சோதித்தறியும் பரீட்சார்த்த நடவடிக்கைகள் ஆராய்ச்சிப் பிரிவின் விடயப் பரப்பிற்கு உள்ளடக்கப்பட்டது. அதனடிப்படையில் 1978 ஆம் ஆண்டு தொடக்கம் 1998 ஆம் ஆண்டு வரை மாற்று முகவர்களுக்கான நிகழ்ச்சித் திட்டத்தின் வழிப்படுத்தல் நடவடிக்கைகளின் பிரதானமானதொரு பொறுப்பாக மாறியது. 1998 ஆம் ஆண்டில் கருத்திட்ட காலம் முடிவடைந்ததன் காரணமாக மாற்று முகவர் நிகழ்ச்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட 64 நிலையங்களை சுயாதீனமானதும் நிறுவனமயப்படுத்தும் தீர்மானத்துடன் இணைந்த விதத்தில் பிரஜாசக்தி அமைப்பு வலையமைப்பு கட்டி எழுப்பப்பட்டது. அந்த அமைப்பு வலையமைப்பிற்கு வழிகாட்டும் ஆலோசனைகளை வழங்கும் பொறுப்பு ஆராய்ச்சிப் பிரிவின் கடமைப் பொறுப்பாக அமைந்தது.
குடும்பங்களை இலக்காகக் கொண்ட அபிவிருத்தி அணுகுமுறையாக மனை முகாமைத்துவம் மற்றும் குடும்ப அபிவிருத்தி என்பன ஆராய்ச்சி பிரிவின் ஊடாக செயற்பாடுகளுடன் கூடிய நிகழ்ச்சித் திட்டமாக கட்டமைக்கப்பட்டது. அவ்வாறே 2000 ஆம் ஆண்டில் கனேடிய சர்வதேச அபிவிருத்தி நிறுவனத்துடன் இணைந்து ஆண் பெண் சமூக எண்ணக்கருவை அபிவிருத்தி திட்டங்களில் உள்ளடக்கும் தேசிய மட்டத்திலான பயிற்சி மற்றும் ஆய்வு நடவடிக்கைகளில் நிறுவனம் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது. சுமார் 40 வருட காலப்பகுதியில் கிராம அபிவிருத்தி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான பரந்த துறைகளூடாக செயற்பாட்டு ரீதியான ஆராய்ச்சிகள், சமூக ரீதியான ஆராய்ச்சிகள், தொகை மதிப்பு மற்றும் விடய ஆய்வு போன்ற ஆய்வு நடவடிக்கைகளிலும், அனுவங்களைப் பகிரும் செயலமர்வுகளிலும், திறந்த விவாதங்களிலும் தனது புதிய அறிவினை பகிர்ந்து கொள்ளும் நடவடிக்கைகளிலும், ஆராய்ச்சி அறிக்கைகளை வெளியிடுவதிலும் 'சத்ய' உண்மை என்ற பத்திரிகையை வெளியிடுவதிலும் ஆராய்ச்சிப் பிரிவு தனது செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்கின்றது.
Research Programmes in progress-2020
Research Programme | Objective |
Functional research for empowering the poor. | Obtaining contribution toward sustainable development through empowering Samurdhi beneficiaries. |
Survey on the views of beneficiaries regarding the quantitative and qualitative aspects of the micro finance service facilities provided by Samurdhi Banks. | While conquering the issues and limitations so far created within the service facility product (cluster) provided by the Samurdhi Community-based Banks for their service recipients, researching on productivity tactics and financial tools that can improve its financial and social performance. |
Training programmes for university students on the applications of rural planning and participatory development as a methodology for rural development and poverty alleviation. | Preparation of a methodology for improving the productivity of rural development programmes and minimizing rural poverty through the development of knowledge, skills and attitudes on participatory planning techniques in university students. |