நோக்கு
“சுபீட்சமான இலங்கையைக் கட்டியெழுப்புவதற்காக மக்களை வலுப்படுத்தும் முன்னணி நிறுவனமாகத் திகழ்தல்.”
பணிநோக்கு
“பங்கேற்றல் அபிவிருத்தி முறைகளைக் கையாண்டு மக்களை வலுப்படுத்தி நிலைபேறான கிராமிய அபிவிருத்திக்காக அவர்களது தொடர்ச்சியான பங்கேற்றலை அதிகரிப்பதற்கு பயிற்சி, அபிவிருத்தி மற்றும் தகவல்களை வழங்குவதன் மூலம் எமது பங்களிப்பை நல்குதல்.”
கிராமிய அபிவிருத்தி பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமானது, 1974 ஆம் ஆண்டு பங்கேற்றல் அபிவிருத்தியை, அபிவிருத்தித் துறைக்கு அறிமுகப்படுத்திய அடிப்படை முன்னணி நிறுவனம் என்ற பெருமையுடன் தாபிக்கப்பட்டது. 1978ஆம் ஆண்டு கிராமிய அபிவிருத்தி பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தினால், ‘மாற்றங்களுக்கான முகவர் முறை’ அபிவிருத்தி துறையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அத்துடன் கிராமிய அபிவிருத்தி பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தினாலேயே முதன் முறையாக அபிவிருத்தித் துறையில் செயற்பாட்டு ஆராய்ச்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஜனசவிய, சமுர்த்தி மற்றும் கிராமிய எழுச்சி (கம நெகும) போன்ற அரசின் முக்கிய அபிவிருத்தித் திட்டங்கள் யாவிலும் மக்களது பங்களிப்பை பெற்றுக் கொள்வதற்காக இந்நிறுவனத்தின் ‘சமூக அசைவூட்டல் முறை’ ஈடுபடுத்தப்பட்டது.

ஊரக வளர்ச்சி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சகம்,
மாண்புமிகு அமைச்சர்
கலாநிதி உபாலி பன்னிலகே

ஊரக வளர்ச்சி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சகம்,
கௌரவ. பிரதி அமைச்சர்
திரு.வசந்த பியதிஸ்ஸ

ஊரக வளர்ச்சி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சகம்,
செயலாளர்
திரு.சம்பத் மந்திரிநாயக்க

Rural Development Training and Research Institute (RDTRI)
Director
Ms. Thilini Surangika Karasnagoda


